திருச்சிராப்பள்ளி, ஜூன் 14-
திருச்சி பெல் வளாகத்தில் 1964-இல் துவங்கப்பட்டு இதுநாள் வரை சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் தமிழ்பயிற்று மொழி நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை முடிந்து முதல் நாள் வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சந்தனம், குங்குமம் கொடுத்தும், பன்னீர் தெளித்தும், இனிப்பு மற்றும் பென்சில், பேனா கொடுத்தும் உற்சாகமாக வர வேற்றனர்.
நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ரெஜிபெஞ்சமின் கலந்து கொண்டு மாண வர்களிடம் பேசுகையில், தமிழ்வழி கல்வி யில் பயின்றும் அனைத்துத் துறைகளி லும் சாதிக்கலாம் என தன்னம்பிக்கையூட்டி னார். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசி ரியர் ஸ்ரீதேவி மற்றும் ஆசிரியை, ஆசிரி யர்கள் செய்திருந்தனர்.