மதுரை தொகுதியில் வாக்குச் சேகரிப்பின் போது, சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு பல்வேறு இடங்களில் மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக நெல்பேட்டை பகுதியில் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் மலர்களை தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். இதேபோல் இஸ்மாயில்புரம், செல்லூர் பகுதிகளிலும் திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதே போல தினமணி தியேட்டர் அருகில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஓ.பி.திலீபன் சக்கரவர்த்தியின் மகள் சிறுமி ஆரோகி சக்கரவர்த்தி, வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பேசினார். தொடர்ந்து அவருக்கு வேட்பாளர் சு.வெங்கடேசன், திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆகியோர் மலர்களை தூவி வாழ்த்து கூறினர்.