districts

img

திருக்கடையூரில் விவசாயிகள் சங்கத்தின் தொடர் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

மயிலாடுதுறை, டிச.28 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்க டையூரில் 7 நாட்களாக தொடர்ந்து  இரவு-பகலாக நடைபெற்று வந்த  காத்திருப்புப் போராட்டம் அதிகாரிகளு டனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. சட்டநாதபுரம் முதல் தேவானூர் வரை அமைக்கப்பட்டு வரும் நான்கு  வழிச்சாலைக்காக விவசாயிகளிட மிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்க ளுக்குரிய இழப்பீட்டை தரக் கோரி யும், குடிசைகளை இழக்கும் ஏழை களுக்கு மாற்று இடமும், வீடும் உரிய  இழப்பீடும் கேட்டு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் திருக்கடையூரில் சாலைப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனமான வில்ஸ்பன் அலுவ லகம் முன்பு கடந்த டிச. 21 ஆம் தேதி  முதல் தொடர் காத்திருப்பு போராட் டத்தை துவங்கினர். கடுமையான குளிர், வெயிலிலும் இரவு-பகலாக நடைபெற்று வந்த போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவல்துறையினர், வருவாய்த் துறையி னர் மேற்கொண்ட முயற்சிகளை யெல்லாம் முறியடித்து 7 நாட்கள் தொடர்ந்து நடந்த போராட்டத்திற்கு விவ சாயிகளும், பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியரோ கண்டுகொள்ளாமல் இருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருக்க டையூர் வழியாக செல்ல வேண்டிய ஆட்சியர் நிகழ்ச்சிகளுக்கு செல்லா மலும், மாற்றுச்சாலை வழியாகவும் சென்று வந்தார். ஆட்சியரின் இந்த போக்கு போராட்டக் குழுவுக்கும், பாதிக் கப்படும் விவசாயிகள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  இந்நிலையில் 8 ஆவது நாளான செவ்வாயன்று (டிச.28) காத்திருப்பு போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தொடரப் போவதாக அறி வித்ததையடுத்து, திங்களன்று மாலை சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில், தரங்கம்பாடி வட்டாட்சி யர் அலுவலகத்தில்  பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், டிஎஸ்பி (பொ) கென்னடி, வட்டாட்சியர் ஹரிதரன், நெடுஞ்சாலைத்துறை தனி வட்டாட்சி யர் சுந்தரி, வில்ஸ்பன் ஒப்பந்த நிறுவன  மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ் மற்றும் நிறுவன பொது மேலாளர், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.சீனிவா சன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்ட தலைவர் டி.சிம்சன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்  ஜி.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பல மணி நேரம் நீடித்த பேச்சுவார்த் தையில், பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய இழப்பீடும், குடிசை களை இழக்கும் ஏழைகளுக்கு மாற்று இடமும், வீடு கட்டுவதற்கான பணமும்  தருவதாகவும் விவசாயிகளுக்கு உரிய  இழப்பீடு தரும் வரை பிரச்சனைக்குரிய  பகுதிகளில் சாலைப் பணியை மேற் கொள்ளமாட்டோம் என எழுத்துப் பூர்வமாக உறுதியளித்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற இருந்த காத்திருப்பு போராட் டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறி வித்துள்ளது. இது தொடர்பாக திருக்கடையூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் போராட்டக் குழுவினர் கூறுகையில், ஜனவரி 5-க்குள் இழப்பீட்டை தருவ தாகவும், விவசாயிகள் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறை வேற்றி விடுவதாகவும் உறுதியளித்த தையடுத்து தற்காலிகமாக போராட் டத்தை கைவிடுகிறோம் என அறிவித் துள்ளனர்.