districts

img

இடையாத்திமங்கலம் தொடக்கபள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் இடையாத்திமங்கலம் தொடக்கபள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியம், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.