திருச்சிராப்பள்ளி, ஜூன் 4-
அரசுப் பள்ளி மாணவர்களிடம் தகவல் தொடர்புத் திறனை வளர்க்கும் வகையில், திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் கல்வித்துறை- பள்ளித் தலை மையாசிரியர்கள் இணைந்து ஆங்கில சிறப்புப் பயிற்சி முகாமை நடத்தியது.
அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழியை நன்கு அறிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலப் மொழி பயிற்சித் திட்டத்தை அதிகாரிகள் வடிவமைத்திருந்தனர். சில தனி யார் பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் புலமைக்கு நிகராக அரசுப்பள்ளி மாணவர்களையும் தயார்படுத்தும் வகை யில் இந்த முகாம் நடைபெற்றது.
முகாமில் தனியார் நிறுவனங்கள் உட்பட 25 பள்ளி களைச் சேர்ந்த 60 மாணவர்கள் மூன்று மணி நேரம் பயிற்சி பெற்றனர். மாணவர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், மொழி மீதான பயத்தைப் போக்கவும் இந்த பயிற்சி முகாம் உதவி யுள்ளது.
இதுகுறித்து அந்தநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் (பொ) கே.மருதநாயகம் கூறுகையில், இந்த கோடைகால வகுப்புகள் மாணவர்களிடையே சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியது. “கற்பித்தல் செயல்முறை கலந்துரை யாடல் சுவாரஸ்யமாக இருந்தது. நாடகங்கள், கதைகள் மூலம் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதால், மாணவர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது. மேலும் மாணவர்களின் தன்னம் பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த முகாம் முழு வெற்றி பெற்றதையடுத்து, பள்ளி நேரம் முடிந்தவுடன் மாலையில் தொடர்ந்து பயிற்சி அளிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். “முகாம் நல்ல பலனைத் தந்துள்ளது. அனைத்து மாணவர்களும் அணுகும் வகையில் ஆங்கிலப் பயிற்சியை இல்லம் தேடிக் கல்வித் திட்டத்துடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.