districts

img

எண்டோசல்பான் மறுவாழ்வு கிராமம் முதல் கட்டப்பணி ஜூனில் முடியும்

காசர்கோடு, ஜன.1- காசர்கோடு மாவட்டத் தில் உள்ள போவிக்கணம் முதலப்பாறையில் தொடங்  கப்பட்டுள்ள எண்டோசல் பான் மறுவாழ்வு கிராமத்  தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என கேரள உயர்கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்தார். திட்டப் பகுதியில் கட்டு மானப் பணிகளை சனியன்று  (டிச.31) பார்வையிட்ட பின் னர் அமைச்சர் செய்தியாளர்  களிடம் இதனைத் தெரிவித் தார். முதல் கட்டத்தில் நீர் சிகிச்சை பிரிவு, மருத்துவ உளவியலாளரின் சேவை கள் மற்றும் ஆலோசனை அறை ஆகியவை இருக்கும். பின்னர் அனைத்து வகை யான சிகிச்சை வசதிகளுடன்  கூடிய மையமாக இது மாற் றப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள எண்டோசல்பான் நோயாளிகளுக்கான ஆத ரவு அமைப்பை உறுதி செய் யும் வகையில் மறுவாழ்வு கிராமம் அமையும். தேவை யான மாஸ்டர் பிளானை  தயார் செய்ய பரிந்துரைக்கப்  பட்டுள்ளது. விரிவான திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டு நிதி திரட்டுவது உறுதி செய்  யப்படும் என்றார் அமைச்சர் சி.எச்.குஞ்சம்பு எம்.எல்.ஏ.,  மாவட்ட சமூகநீதி அலுவலர் ஷீபா மும்தாஜ், ஒப்பந்ததார ரான உராளுங்கள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.