districts

img

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூலை 27-

     பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு  சார்பில் கரூரில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

     தையல் சங்க மாவட்டக் கௌரவத்தலைவர் ஆர்.ஹோச்சுமின், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. முருகேசன், மாவட்டப் பொருளாளர் ப.சரவணன் கட்டுமான சங்க மாவட்டச்  செயலாளர் சி.ஆர்.ராஜா முகமது, டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தையல் சங்க மாவட்டச் செயலாளர் செந்தில்முருகன் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.

   ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், கட்டுமான நலவாரியம் போல் அனைத்து  உடலுழைப்பு நலவாரியங்க ளுக்கும் பணப்பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும். பென்ஷன் மாதம்தோறும் 10-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். அனைத்துப் பணப்பயன்களையும் 30 நாட்  களுக்குள் வழங்க வேண் டும். பெண்களுக்கு 55 வய தில் பென்ஷன் வழங்க வேண்டும். வீடு கட்ட ரூ.4  லட்சம், இலவச தையல்  மிஷின் வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர் களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். பென்  சன் ரூ.3 ஆயிரம் வழங்க  வேண்டும். உடலுழைப்பு நல வாரிய பணப்பயன்களை விரைந்து வழங்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.