விருதுநகர், ஜூலை 8- விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தே பாரத் சிறப்பு ரயில் புறக்கணித்து செல்லும் வகையில் தெற்கு ரயில்வே கால அட்டவணை வெளியிட்டுள்ளது. இதனை உடனடியாக மறுபரிசீலனை செய்து விருதுநகரில் அந்த ரயிலானது நின்று செல்ல நட வடிக்கை எடுக்க வேண்டு மென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்னர். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் (விடிட்சியா) தலைவர் இத யம் முத்து மற்றும் செயலா ளர் கே.சி. குருசாமி ஆகி யோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியது: வந்தே பாரத் சிறப்பு ரயில் கள் தற்போது வாரத்தில் 4 நாட்கள் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே இயக்கப்பட உள்ளது. அதற் கான முன்பதிவும் திறக் கப்பட்டுள்ளது. அதில் விருதுநகர் சந் திப்பின் நிறுத்தம் நீக்கம் செய்யப்பட்டு கோவில்பட்டி சேர்க்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத் தக்கதாகும். தென் பகுதியில் கன்னியாகுமரி மற்றும் கேரளா வரை சென்று வரு வதற்கு முக்கிய சந்திப்பாக விருதுநகர் திகழ்ந்து வரு கிறது. விருதுநகர் மாவட்டத் தில் சிவகாசி, இராஜபாளை யம், திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, திருச் சுழி உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் விருது நகர் சந்திப்பிற்கு வந்து போகும் முக்கிய இடமாக உள்ளது. இந்நிலையில் விருதுநகர் நிறுத்தம் புறக்க ணிக்கப்பட்டிருப்பது வியா பாரிகள் மற்றும் பொதுமக் கள் இடையே மிகுந்த ஏமாற் றத்தை அளித்துள்ளது. மேலும், இதனால், தொழில் வளர்ச்சி நசுக்கப்படும் சூழ லையும் ஏற்படுத்தி உள் ளது. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர் கள் சங்க செயலாளர் ஜெய சங்கர் கூறுகையில், ஜூலை 11 முதல் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயி லுக்கு விருதுநகரில் நிறுத் தம் வழங்காதது வர்த்தகர் கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. விருதுநகர் மாவட்ட மானது, விருதுநகர், சிவ காசி, இராஜபாளையம் போன்ற சிறந்த தொழில்நக ரங்களை உள்ளடக்கியது. தினசரி ஆயிரக்கணக்கோர் தொழில் நிமித்தமாக ரயி லில் சென்னை சென்று வரு கின்றனர். சிறப்பு ரயில் என்பது அனைத்துப் பகுதி மக்க ளுக்கும் சிறப்பான சேவை யை தர வேண்டுமே தவிர, சிரமத்தை தரக்கூடாது. தெற்கு ரயில்வேயின் இச் செயல் தமிழகத்தின் முக்கிய தொழில் மாவட்டத்தை வஞ் சிப்பது போல் உள்ளது. எனவே, விருதுநகர் நிறுத்தத்துடன் சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயிலை இயக்க வேண் டும் என்று தெரிவித்துள்ளார்.