districts

ஷாக் அளித்த மின் கட்டணம் இலவச மின் இணைப்புக்கும் கட்டணம் செலுத்த வேண்டுமா

தஞ்சாவூர், ஆக.13 -

     குருவிக்கரம்பையில் இலவச மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கு 1,500 ரூபாயும், 10 ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரையும் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது வந்துள் ளது. இதனால் கடந்த 4 மாதங்களாக கிராம மக்கள் திண்டாடி வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக் கரம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில், இதுவரை இலவச மின்சாரம் பெற்று வந்த வீடு களுக்கு 1,500 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. கடந்த காலங்களில் ரூ.400- 500 கட்டியவர்களுக்கு, தற்போது ரூ.4,000 முதல் 5,000 வரை மின் கட்டணம் வந்துள்ளது.  மேலும், ஒரு குடிசை  வீட்டிற்கு ரூ.15 ஆயிரம் கட்டச் சொல்லி மின் கட்ட ணம் வந்துள்ளது.

    இப்படி யாக, ஒவ்வொருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தியும், ரசீ தும் வந்ததைப் பார்த்த  பொதுமக்கள் அதிர்ச்சிய டைந்தனர்.  

    இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளனர். அவர்கள் முறையான பதில் அளிக்க வில்லை. பின்னர், உயர்  அதிகாரிகளிடம், ஆட்சியரி டம் மனு அளித்துள்ளனர். அதன் பிறகு வந்த மின்வா ரிய அலுவலர்கள், மீட்டரை ஆய்வு செய்துவிட்டு, மீட்ட ரில் பிரச்சனை எனக் கூறி  விட்டனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில், மின் கணக்கீட்டாளர் முறை யாக கணக்கீடு செய்ய வில்லை என அதிகாரி களுக்கு தெரியவந்தது.  

     இதனால், அதிகாரிகள் பிரச்சனையை தவிர்க்க, புகார் அளித்தவர்களை அழைத்துப் பேசி, பாதி கட்டணங்களை செலுத்த கூறியுள்ளனர். மேலும், மின் கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என மின்வாரிய அலுவலர்கள் கூறுவதால், கடந்த நான்கு மாதங்களாக கிராம மக்கள் போராடி வருகின்றனர்.

    இதுகுறித்து குருவி கரம்பையைச் சேர்ந்த கோ. ராமசாமி கூறுகையில், மின்  கணக்கீட்டாளர், மின் கணக்கு எடுக்க வராமல், உத்தேச பயன்பாட்டினை கொண்டே மின் கட்ட ணத்தை கணக்கீடு செய்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல்  மாதம் வந்த மின்கட்ட ணத்தை செலுத்த சென்ற போதுதான், நூறு யூனிட்  குறைக்காமல், மின் கட்ட ணத்தை குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது மின் கட்ட ணத்தை கட்டுமாறு அதி காரிகள் கட்டாயப் படுத்துகின்றனர். ஆனால், கடந்த மாதங்களில் குறைந்த அளவிலான மின்கட்டணம் தான் வருகிறது. மின் சாரத்துறை அமைச்சர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

   பாதிக்கப்பட்ட தனபால் கூறுகையில், “மின்  கட்டணம் வந்தது வந்தது தான். கட்டணத்தை நிச்சயம்  செலுத்தித் தான் ஆக  வேண்டும் என கூறுகின்ற னர். குறைவாக இருந்த சிலர்  பணத்தை செலுத்தி விட்ட னர். ஆனால், ஏழ்மையான நிலையில் உள்ள சிலரால் இவ்வளவு பெரிய தொகை கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இந்த மாதம்  கணக்கீட்டுடன், கூடுதலாக பழைய பாக்கியையும் செலுத்த வேண்டிய நிலை உள்ளது” என்றார்.