districts

மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஆக.29 - தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருச்சி கிளை 13-வது ஆண்டு பேரவை கூட்டம் மணப்பாறையில் எம்.எஸ்.நாடார் மஹாலில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பஷீர் துவக்க உரையாற்றினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலசுப்ரமணி, மாநில துணைத் தலைவர் கிறிஸ்துவராஜ் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மின் துறையை பொதுத் துறையாகவே நீடிக்க வேண்டும். 2022 மின்சார சட்ட;j திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெற்றோர்களுக்கான மருத்துவ  காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடி களை நீக்க வேண்டும். காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். டி.ஏ. சரண்டர்களை  உடனே வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தலைவராக எம்.மனோகரன், செயலா ளராக பன்னீர்செல்வம், பொருளாளராக சிவ ஞானம் உள்பட 12 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில துணைத் தலைவர் ஜெயபாண்டியன் நிறைவுரை யாற்றினார். வட்ட கிளைத் தலைவர் மனோ கரன் நன்றி கூறினார்.

;