districts

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

வேலூர், மார்ச் 16- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வேலூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளரும், கூட்ட மைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எ.சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் மாநில செயல்பாடுகள் குறித்து பேசி னார்.  தமிழ்நாடு முது நிலை பட்டதாரி ஆசிரி யர் கழகத்தின் மாவட்ட தலைமை நிலைய செய லாளர் திருக்குமரன் தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பெ.இளங்கோ ஆகி யோரும் பேசினர். தேர்தல் அறிக்கையில் கூறியபடி,“தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூ திய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும்” என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 22ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மார்ச் 28, 29 ஆகிய தேதி களில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பில் இணைந்துள்ள 9 சங்கங்களும் பங்  கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

;