திருச்சிராப்பள்ளி, ஜூன் 22-
அயல்நாடுகளில் பயி லும் சிறுபான்மை மாண வர்களின் கல்விக் கடன், வட்டி மானியம் ஆகிய வற்றை நிறுத்தியதை கண் டித்தும், சிறுபான்மை மாண வர்களின் கல்வி உதவித் தொகைகளை தொடர்ந்து வழங்க வேண்டும், பாஜக அரசால் சிறுபான்மை மாண வர்களுக்கு நிறுத்தப்பட்ட பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப், மெளலானா ஆசாத் தேசிய கல்வி ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் வியா ழனன்று தென்னூர் அரச மரத்தடி அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நலக் குழுவின் மாவட்டச் செயலா ளர் ரபீக் தலைமை வகித் தார். சமூக செயல்பாட்டாளர் ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் வின்சென்ட், மாவட்டக் குழு உறுப்பினர் அன்வர் உசேன் ஆகியோர் விளக்கிப் பேசினர். இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் அப் துல்கயூம், வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டக் குழு உறுப்பினர் ஷேக் நன்றி கூறினார்.