districts

img

நலிவடையும் நெட்டி மாலை தொழில்: அரசு உதவ கோரிக்கை

மயிலாடுதுறை, ஜன.11-  போகி  பொங்கல், தை பொங்  கல், மாட்டு பொங்கல், காணும்  பொங்கல் என 4 நாள் பண்டிகை யை காலங்காலமாக தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடிவரும் சூழலில் மாட்டுப்பொங்கலின் போது மாடு, ஆடுகளின் கழுத்து களில் தோரணமாக தொங்கவிடப் படும் நெட்டியிலிருந்து தயாரிக் கப்படும் நெட்டி மாலை தொழில் இன்று கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.  செடி வகையான நெட்டி பெரிய குளங்கள், ஏரிகளில் முளைத்தி ருக்கும். அவற்றை வெட்டி எடுத்து வந்து பதப்படுத்தி, மாலைகளில் கோர்க்கும் வகையில் பல வடி வங்களில் நறுக்கி, வண்ண நீர்  களில் கலந்து, அதை மாலையாக கோர்த்து பொங்கல் பண்டிகை யின்போது, விற்பனை செய்து ஓர ளவிற்கு லாபம் ஈட்டி வந்தனர்.  இந்நிலையில், தற்போது பிளாஸ்டிக் மோகத்தினால் விற் பனை குறைந்து வருகிறது. பாரம்  பரியமான இயற்கைக்கு கேடு விளைவிக்காத நெட்டி மாலை தொழிலுக்கு அரசு கடன் உதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.  நெட்டி மாலை செய்யும் தொழிலை 100 ஆண்டுகளை கடந்து பரம்பரையாக செய்துவருகிற மயி லாடுதுறை அருகிலுள்ள மூங்கில் தோட்டம், மெயின்ரோட்டில் வசிக் கும் சிவானந்தம் என்பவரை நேரில் சந்தித்தபோது, ‘‘எங்க தாத்தா காலத்திலிருந்து இந்த தொழிலை செய்யுறோம். 20 பெண்களுக்கு 3 மாத காலத்திற்கு வேலை தருகி றோம். ரூ.10, 15, 20 என்று மூன்று  விலைகளில் மாலைகளை விற்கி றோம்.  பல ஆண்டுகளாக வெகுத் தொலைவுகளில் உள்ள ஏரிகளில் முளைத்து காணப்படும் நெட்டி களை எடுத்துவந்து, அவற்றை பதப்  படுத்தி துணிக்கு பயன்படுத்தப் படும் வண்ண நீர்களில் நனைத்து காயவைத்து மாலையாக கோர்த்து விற்பனைக்கு தருகிறோம்.  மனித உழைப்பு, மூலப்பொருட்க ளின் செலவை கணக்கீடு செய்தால் ஒன்றுமே மிச்சமில்லை.  விலைக்குறைவாகவே நெட்டி மாலைகளை விற்று வருகிறோம். வியாபாரிகள் மொத்தமாகவும், சிலர் நேரில் வந்து வாங்கி சென்றா லும் லாபம் எதுவுமில்லை. ‘அழிந்து வரும் தொழில்’ என கருதி வங்கி  கடன் உதவி வழங்கினால் பொங் கல் காலங்களில் இன்னும் கூடுத லான நபர்களுக்கு வேலை வாய்ப்பை தருவதோடு, மற்ற வர்களுக்கும் இத்தொழிலை கற்றுத் தரலாம்’’ எனக் கூறினார். -செ.ஜான்சன்