தஞ்சாவூர், ஜூன் 20-
பள்ளிகளில் விளையாட்டுப் பாட வேளையில் மாணவர்கள் விளையாடு வதற்கு ஆசிரியர்கள் அனுமதிக்க வேண் டும். அப்போதுதான் மாணவர்கள் விளை யாட்டுத் துறையில் சாதிக்க முடியும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கேட்டுக் கொண்டார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில், திங்கள்கிழமை மாலை, மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா நடை பெற்றது.
விழாவுக்கு வந்தவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெ.டேவிட் டேனி யல் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பி னர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் விளையாட்டுப் போட்டி களில் வென்றவர்களுக்கு சான்றிதழ் மற் றும் பரிசுகள் வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் மூலம் கிராமப் புறங்க ளில் வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் திற மையான விளையாட்டு வீரர்களை அடை யாளம் காண முடியும். இதில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்து வம் அளிக்கப்பட்டது. தமிழக முழுவதும் 3,71,352 வீரர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,979 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 674 பேர் மண்டல அளவி லான போட்டிகளிலும் வென்றுள்ளனர்.
மாநில அளவிலான போட்டிகள் ஜூன் 30 ஆம் தேதி துவங்குகிறது. வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சாவூர் வருங்காலங்களில் விளை யாட்டு துறைகளிலும் சிறந்து விளங்கும். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பல்வேறு சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
பி.டி. வகுப்பை (விளையாட்டு வகுப்பு) கடன் வாங்கி வேறு வகுப்புகளை நடத்தா மல், மாணவர்கள் விளையாட ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும். விளையாட்டு வீரர் கள் அனைவருக்கும் பல்வேறு களங்கள் காத்திருக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.