districts

img

போதையில்லா திருச்சி மாநகரம்: விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.4 - போதை ஒழிப்பு விழிப்புணர்வை வலி யுறுத்தி நடைபெற்ற மொராய்சிட்டி மாரத் தான் ஓட்டத்தில் 2,500 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். திருச்சியை போதையில்லா மாநகரமாக  உருவாக்குவதை வலியுறுத்தி, திருச்சி  மாநகர காவல் துறை மற்றும் மொராய்சிட்டி  இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் என இரு பிரிவுகளாக ‘மொ ராய்சிட்டி மாரத்தான் போட்டி’ ஞாயிறன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது. போட்டிகளை திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் சுரேஷ்குமார், ஜோசப் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர், மொராய்ஸ்சிட்டி உரிமையாளர் லெரொன்மொராய்ஸ் ஆகியோர் கொடிய சைத்து தொடங்கி வைத்தனர்.  ஜோசப் கல்லூரியில் தொடங்கிய மாரத் தான் ஓட்டம் மேலப்புலிவார்டு ரோடு, மரக்கடை, மதுரை ரோடு, பாலக்கரை, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம், கல்லுக்குழி ரயில்வே மேம்பாலம், டிவிஎஸ்  டோல்கேட், சுப்பிரமணியபுரம், விமான நிலை யம் வழியாக 10 கி.மீட்டர் தூரத்தை கடந்து மொராய்ஸ் சிட்டியை சென்றடைந்தது. போட்டியில் 2,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ் வழங்கப்பட்டது.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ15.000, இரண்டாம் பரிசாக  ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5000 வழங்கப் பட்டது.