பெரம்பலூர், ஜன.12 - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பெரம்ப லூர் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு மைதா னத்தில் மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டி நடைபெற்றது. போட்டியினை பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் துவக்கி வைத்தார். போட்டியில் பெரம்பலூர் மாவட்டத் தைச் சேர்ந்த 21 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை சு.ஆடுதுறையைச் சேர்ந்த மணி பிரதர்ஸ் அணியும் - ரூ.15,000, 2 ஆவது பரிசை கொளக்காநத்தம் டிஜிபி அணியும் - ரூ.10,000, 3 ஆவது பரிசை திரு மாந்துறை எஃப். வி.சி அணியும் - ரூ.7,500, 4 ஆவது பரிசை சு.ஆடுதுறை பள்ளி மாண வர்கள் அணியும் - ரூ.5,000 பெற்றனர். இந்த அணிகளுக்கு பரிசு கோப்பையும் வழங்கப் பட்டது. சிறப்பாக விளையாடிய இரு வருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.