districts

மாவட்ட அளவிலானப் பேச்சு போட்டி

திருவாரூர், ஏப்.30-  

    தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் திரு வாருர் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி  திருவாரூர் இராபியம்மாள் அகமது மொய்தீன் கல்லூரி யில் நடைபெற்றது.  

    திருவாருர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். இராபியம்மாள் கல்லூரி செயலாளர் பெரோஷா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளரும் நகர்மன்ற உறுப்பினருமான வரத ராஜன் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்  ஹமீது நன்றி கூறினார்.

   மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 75-  க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.  தமிழ் வழி பேச்சு போட்டியில் திரு.வி.க அரசு கலைக்  கல்லூரி மாண, ஆங்கில வழி பேச்சு போட்டியில் இரபி யம்மாள் கல்லூரி மாணவி இருவரும் முதலிடத்தைப் பிடித்தனர்.  

  போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நகர்மன்றத் தலைவர் புவன பிரியா, துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். தாட்கோ தலைவர் மதிவாணன், மாநில ஒருங்கிணைப்பாளர் பேரா. ஹாஜாகனி, இராபியம்மாள் கல்லூரி முதல்வர் விஜய லெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.