districts

img

விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க மாவட்ட அளவில் போட்டிகள்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 4 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஸ்போர் ட்ஸ் அகாடமியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா, மாணவர்களின் திறன் ஊக்கு விக்கும் வகையில் பல மாவட்ட மாணவர்கள் கலந்து  கொண்ட விளையாட்டு போட்டிகள், குழந்தைகளுக் கான தடகளப் போட்டிகள் திருத்துறைப்பூண்டி பி.எஸ்.ஏ  காம்ப்ளக்ஸில் நடைபெற்றன.  இதற்கான துவக்க விழா வில் மன்னார்குடி கால்பந் தாட்ட அகாடமி நிறுவனர் மார்க்ஸ், திருத்துறைப் பூண்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒலிம் பிக் ஜோதியை ஏற்றி வைத்து  பேரணியை தொடங்கி வைத் தார். எலும்பு முறிவு மருத்து வர் சுரேஷ் கொடியேற்றி வைத்தும், தலைமை வகித் தும் விளையாட்டுப் போட்டி களை துவக்கி வைத்தார்.  அகாடமி செயலாளர் ராஜநாராயணன் வர வேற்றார். ஆர்.எஸ்.ஆர் நிறு வன மேலாண் இயக்குநர் அரிமா, ஆர்.எஸ்.ஆர். செல்வ கணபதி, பார்ம் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் பர்வீன் ஆரிஃப்  ஆகியோர் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசு களை வழங்கினர். இப்போட்டி களில் கும்பகோணம், திரு வாரூர், கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி, மன் னார்குடி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், வேதா ரண்யம் உட்பட பல்வேறு மாவட்டப் பகுதிகளிலிருந்து  அம்மையப்பன் அரசி னர் மேல்நிலைப் பள்ளி உடற் கல்வி ஆசிரியர் இளைய ராஜா பார்த்திபன்  நன்றி கூறினார்.