districts

மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக் குழுக் கூட்டம்

 திருச்சிராப்பள்ளி, மார்ச் 10- மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், அனைவருக்கும் கல்வி இயக்கம், குடிநீர்வடிகால் வாரியம், மின்சாரவாரியம், ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை, உள்ளிட்ட பல்வேறுதுறைகளின் சார்பில், செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயலாக்கங்கள் குறித்து, கண்காணிப்புக் குழுவின் தலைவரான திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு ஆய்வுசெய்தார்.