districts

img

ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆய்வு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செவ்வாயன்று ஆய்வு செய்தார். அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டியை நடத்திட ஆலோசனை வழங்கினார். அருகில் இணை இயக்குநர் கால்நடை பராமரிப்பு துறை எஸ்தர் ஷீலா உள்ளிட்டோர்.