districts

img

கனமழையால் தென்மாவட்டங்கள் கடும் பாதிப்பு தஞ்சை. பட்டுக்கோட்டை, திருவிடைமருதூரிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர், டிச.21 -  வரலாறு காணாத கனமழையால்  திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தஞ்சை.பட்டுக்கோட்டை,திருவிடைமருதூரிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் சார்பாக, நிவாரணப் பொருட்களை கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருது பாண்டியன், தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் மா. விஜயா, கல்வியியல் கல்லூரி முதல் வர் ப.சுப்ரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ், மேலாளர் கண்ணன், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணி யாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  இதேபோல், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள் ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொது மக்கள் வழங்கிய 4200 கிலோ அரிசி, பிஸ்கட், பால் பவுடர் உள்பட ரூ.2  லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நிவா ரண பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே சாமிநாதன், கை கோவிந்தராஜன் மற் றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர். திருவிடைமருதூர்   தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் ஒன்றியத்தில் பணிபுரியும்  ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில்  சங்க நிதியிலிருந்து ரூ.15 ஆயிரம் மதிப் புள்ள உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தனர்  இந்நிகழ்வில் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி ஆணையர் முருகன், மண்டல துணை வட்டாட்சியர் சித்ரா வீரமணி, ஊராட்சி செயலர் சங்க  தலைவர் வரதராஜன் செயலாளர் குருமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.