திருச்சிராப்பள்ளி, ஜூன் 5-
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலை வரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண்சிங்கை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும், மல்யுத்த வீராங்க னைகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க திருச்சி புறநகர், மணப் பாறை வட்டக்குழுக்கள் சார்பில் மணப் பாறை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க வட்டச் செயலாளர் அய்யாவு தலைமை வகித் தார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கோமதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் பாலகுமார் ஆகியோர் விளக்கிப் பேசி னர்.
ஆர்ப்பாட்டத்தில், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் சரஸ்வதி, வாலிபர் சங்க வட்டப் பொருளாளர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.