districts

செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு

பாபநாசம், ஜுலை 27-

    வீடு கட்டுவதற்காகப் பள்ளம் தோண்டிய போது  பழங்காலத்துச் செப்பு நாணயங்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரியில் வசிக்கும் பாலசுப்பிரமணியன் என்ப வர் வீடு கட்டுவதற்காகப் பள்ளம் தோண்டிய போது  பித்தளை பெட்டி ஒன்று கிடைத்தது. அதில் பழங்காலத் துச் செப்பு நாணயங்கள், ஒரு பைசா நாணயங்கள் உட்படச் சுமார் 300-க்கும் மேற்பட்ட நாணயங்கள் இருந்தன.  தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினர், காவல் துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செப்பு நாண யங்கள் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.