புதுக்கோட்டை, ஏப்.19-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வருவாய் கோட்ட அளவில் கோட்டாட்சியர் தலைமை யில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வெள்ளியன்று (ஏப்ரல் 21) காலை 10 மணிக்கு அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அறந்தாங்கி, ஆவுடை யார்கோவில் மற்றும் மண மேல்குடி ஆகிய வட்டங் களைச் சார்ந்த மாற்றுத்திற னாளிகள் தங்களின் கோரிக் கைகளை மனுக்களாக அளிக் கலாம். மேலும் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.