சேதுபாவாசத்திரம், ஏப்.22-
சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதி யில் செலவை குறைக்க கோடை சாகுபடி யில் நேரடி நெல் விதைப்பு பணியில் விவ சாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் கடைமடை பகுதியான சேதுபாவாசத்திரம் பகுதிக்கு காவிரி நீர் போதுமான அளவு வருவ தில்லை. இதனால் சேதுபாவாசத்திரம் கடை மடையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு போகம் சம்பா சாகுபடி மட்டுமே செய்யப் பட்டு வருகிறது.
ஆழ்குழாய் கிணறு வசதியுள்ள விவசா யிகள் மட்டும் கோடை சாகுபடி நடவு பணி களை செய்து வந்தனர். ஆனால், தற்போது நடவுப்பணி செய்தால் உழவு கூலி, அடியுரம், நடவு ஆட்கள் கூலி என வரு வாயை விட கூடுதல் செலவு அதிகம் ஏற்படு கிறது.
இதனால், பல்வேறு விவசாயிகள் கோடை சாகுபடியை கைவிட்டு விட்டனர். நடவுப்பணிக்கு மும்முனை மின்சாரமும் சிப்ட் முறையில் வழங்குவதால் தண்ணீர் தட்டுப் பாடாக உள்ளது. இதனால் ஒருசில இடங்க ளில் விவசாயிகள் செலவினத்தை குறைத்து சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்ற னர்.