districts

வளர்ச்சித் திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை, மார்ச் 27 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றி யத்தில் பல்வேறு கிராம ஊராட்சி களில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார். செம்பனார்கோயில் ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட அன்னவா சல், இளையானூர், ஆறுபாதி, நரசிங்கபுரம், ஈச்சங்குடி, மடப்புரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அன்னவாசல் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடை பெற்று வரும்  பணிகளையும், இளை யாளூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் பள்ளி திட்டத்தினையும், சுற்றுச் சூழல் பணிகளையும் தொடர்ந்து, ஆறுபாதி ஊராட்சியில் மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ்  நடைபெற்று வரும் மழை நீர் வடிகால்  திட்ட பணிகளையும், பாரத பிரதம ரின் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டுமா னப் பணிகளையும் மாவட்ட ஆட்சி யர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரை வாகவும் தரமாகவும் அமைக்க  சம்பந்தப்பட்ட துறை அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார்.

;