districts

img

திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நிதி வழங்கல்

திருவாரூர், மார்ச் 5 - திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதி மற்றும் நாடாளு மன்றத் தேர்தல் நிதி சிறப்பு சுற்றுப் பயணம் மார்ச் 5, 6  ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடைக்கமிட்டிகளும் நேரடியாக சென்று திரட்டிய நிதியை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. இந்த தேர்தல் நிதி சுற்றுப் பயணத்தில் மாவட்ட  பொறுப்பாளரும், மத்தியக் குழு உறுப்பினருமான பெ.சண்முகம் பங்கேற்று நிதியைப் பெற்றுக் கொண்டார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பி னர்கள் உடன் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் ஒன்றி யம் ரூ.75 ஆயிரம், பேரளம் நகரம் ரூ.50 ஆயிரம், எரவாஞ்சேரி (குடவாசல் வடக்கு) ரூ.15 ஆயி ரம், குடவாசல் (தெற்கு ஒன்றியம்) ரூ.25 ஆயிரம், கொரடாச்சேரி ஒன்றியம் ரூ.4 லட்சத்து 8 ஆயிரம், வலங்கைமான் ஒன்றியம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம், நீடாமங்கலம் ஒன்றியம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம், திருவாரூர் ஒன்றியம் ரூ.27 ஆயிரம், திருவாரூர் நகரம்  ரூ.50 ஆயிரம் என இடைக்கமிட்டிகள், பொது மக்களிடம் பெற்ற நிதியை வழங்கினர்.  இதில் கொரடாச்சேரி ஒன்றியம் கட்சியின் வளர்ச்சி நிதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நிதி என  ரூ.6 லட்சம் வழங்கி, அதன் நிதி கோட்டாவை நிறைவு  செய்தது குறிப்பிடத்தக்கது. கோட்டாவை நிறைவு செய்த கொரடாச்சேரி ஒன்றிய தோழர்களை பெ.சண் முகம் பாராட்டினார்.