districts

img

3 மாத ஊதியத்தை வழங்கக் கோரி டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் போராட்டம்

அறந்தாங்கி, நவ.22 -  புது க்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நூறு  பேரும், டெங்கு  ஒழிப்பு பணியாளர்கள் 30 பேரும் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில், தூய்மைப் பணியாளர் களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கவில்லை.  டெங்கு ஒழிப்பு பணி, வீட்டுவரி வசூல், பிளாஸ்டிக் அகற்றுதல் உள்ளிட்ட பணி களை செய்து வரும் டெங்கு ஒழிப்பு பணியா ளர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதைக் கண்டித்தும், உடனே சம்பளம் வழங்கக் கோரியும் புதுக் கோட்டை மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக அறந்தாங்கி நக ராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை  வகித்தார். சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப் பாளர் கருணா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் கவிபாலா,  சிஐடியு செம்புலிங்கம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் முழக்கம் எழுப்பினர்.  இதையடுத்து நகர்மன்றத் தலைவர் இரா.ஆனந்த், சிஐடியு நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், வருகிற திங்கட்கிழமை சம்பளம் தருவதாக உறுதி யளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.