மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தரப் பணிகளை தனியார்மயமாக்கும் அரசாணையை ரத்துச் செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டுமென வலியுறுத்தி ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள்-என்எம்ஆர் ஊழியர்கள் சங்கம் சார்பில் மன்னார்குடியில் நடைபெற்ற . கண்ணாடிவீரன், முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க மாநிலப் பொருளாளர் இரா.சுவாமிநாதன் அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் செந்தில்ராஜன் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜி. ரெகுபதி, கே.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.