திருவில்லிபுத்தூர், ஆக.13-
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தாணிப்பாறை அடிவாரத்தில் மலைவாழ் மக்கள் வருடம் தோறும் பக்தர்கள் செல்லக்கூடிய வழியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்வது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு வனத்துறை அனுமதி அளிக்காத தோடு மலைவாழ் மக்கள் வியாபாரத்திற்கு வாங்கி வைத்திருந்த பொருட்களை சேதப் படுத்தியுள்ளது
இந்நிலையில் மலைவாழ் மக்கள் வனத் துறையை கண்டித்தும் கடை வைப்பதற்கு அனுமதி கேட்டும் மலையில் குடியேறும் போராட்டத்தை துவக்கி நடத்தி வரு கின்றனர்.
மலைவாழ் மக்களுக்கு ஆதரவாகவும் வனத்துறையின் அடாவடித்தனத்தை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் சார்பில் சனிக்கிழமை வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஜீவா தலைமை வகித்தாத். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜோதி லட்சுமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பேசினர்.
சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் பெனரி மற்றும் ப்ளவக்கல், அத்தி கோயில் மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.