கரூர், செப்.28- தஞ்சாவூர் மாவட்டம் திரு மண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆலை அருகே கரும்பு விவசாயிகள் தொடர்ந்து 301-ஆவது நாளாக காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தஞ் சாவூர் மாவட்ட ஆட்சியர கத்தில் காத்திருப்புப் போரா ட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் சாமி. நட ராஜன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் டி. ரவீந்தி ரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லர் சின்னை. பாண்டியன் உள்பட 40 விவசாயிகளைக் காவல் துறையினர் வலுக் கட்டாயமாகப் பிடித்து கைது செய்தனர். காவல்துறையின் நட வடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கரூர் தோகை மலை பேருந்து நிலையம் முன்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோகைமலை ஒன்றியச் செயலாளர் முனியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி, மாவட்டக் குழு உறுப்பினர் பெருமாள், முருகேசன், பாலகிருஷ்ணன், வேலு, அழகேசன், சங்கப்பிள்ளை உட்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர்.