districts

img

பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விற்பனை விலையை உயர்த்தியதற்கு கண்டனம்

அரியலூர், பிப்.23- பால் கொள்முதல் விலையை ஏற்றாமல், விற்பனை விலையை உயர்த்தியதை கண்டித்தும் பட்டு வாடா போனஸ் வழங்காததை கண்டித் தும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடைக் கட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது அலி தலைமை வகித்தார்.  அப்போது அவர் செய்தியாள ரிடம் தெரிவிக்கையில், “தமிழ்நாடு அரசு ஆவின் நிர்வாகத்தின் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும். ஏறத்தாழ 10 ஆயிரம் ஆரம்ப கூட்டு றவு சங்கங்கள் தமிழ்நாட்டில் இருக் கின்றன. தற்போது தமிழ்நாடு முழு வதும் 25 லட்சம் லிட்டர் அளவுக்கு,  ஆவினுக்கு பால் வருகிறது. கடந்த  ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 40 லட்சம்  லிட்டர் வரை, தமிழ்நாடு முழுவதும்  ஆவினுக்கு பால் கொள்முதலானது. ஆனால் இந்த 3 ஆண்டில், ஆவி னுக்கு கொள்முதல் செய்வதில்  10  லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. வியாழனன்று பால்வளத்துறை அமைச்சர் வழங்கிய அறிவிப்பில், தற்போது ஆவினுக்கு ஆரம்ப  சங்கங்கள் மூலம், 3 லட்சத்து 87  ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் தான் பால் வழங்குகிறார்கள் என்றார்.  அப்படி என்றால் இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் ஒரு லட்சம் பால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு போய்விட்டார்கள். ஏறத்தாழ ஆவி னுக்கு வந்த 10 லட்சம் லிட்டர் பால்,  தற்போது தனியாருக்கு போய்விட்டது.  இந்நிலையில் ஆவின் நிறுவனம் மிகவும் நெருக்கடியில் முடங்கிக் கிடக்கிறது. மேலும் விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததால், தமிழ்நாடு ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டிற்கு ரூ.300 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரூ.300 கோடி ரூபாயை மானியமாக கொடுத்து  இருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக் காது. தமிழ்நாடு அரசு பால்வளத் துறை இதில் கவனம் செலுத்த வேண்டும். கொள்முதலை அதி கரிப்பதற்கு முயற்சி எடுக்க வேண் டும்” என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு  பால் உற்பத்தியாளர் சங்க மாவட் டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை  வகித்தார். ஆர்ப்பாட்டத்தை சிபிஎம்  ஒன்றியச் செயலாளர் வெங்கடா ஜலம் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு  விவசாயிகள் மாவட்டத் தலைவர் கள் மணிவேல், செந்தில்வேல், ஆகி யோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் மகா தேவன், மாதர் சங்கம் மாவட்டத் தலைவர் பத்மாவதி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டக் குழு சேகர், பால் உற்பத்தியாளர் சங்க ஒன்றியத் தலைவர் இளமதி, விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.