கரூர்/திருத்துறைப்பூண்டி, நவ.4 - செவிலியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், ஒரத்தூர் ஆரம்ப சுகா தார நிலையத்தில் 31.10.2024 அன்று மாலை 5 மணிக்கு பணி முடித்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார் செவிலியர் ஒருவர். அவரை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நபர், பின்னால் இருந்து கீழே தள்ளி கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதைக் கண்டு, அங்கு வந்த பொது மக்கள் செவிலியரை காப்பாற்றி லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தொடர்ந்து பெண்கள் மீது, குறிப்பாக செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்தும், செவிலி யர் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செவிலியர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெரும்பாலும் ஊருக்கு வெளியே இருப்பதால், அங்கு இரவு நேர காவலர்களை பணியமர்த்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க வேண்டும். மருத்துவமனையின் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் கண்காணிப்பு கேம ராக்கள் செயல்படுவதையும், அது எந்நேர மும் கண்காணிக்கப்படும் வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும். வன்கொடுமை சம்பவங்கள் நிகழும் போது சட்ட ரீதியான நடவடிக்கைகளை கடு மையான முறையில் தமிழக அரசு எடுக்க வேண்டும். செவிலியர்கள் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.பிரவீனா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மு.செல்வ ராணி, மாவட்டச் செயலாளர் பொன் ஜெய ராம், மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.பிரேம்குமார், மருந்தாளுநர் சங்க மாநிலச் செயலாளர் கே.இளங்கோ, மாவட்டப் பொரு ளாளர் எல்.பாலசுப்பிரமணி ஆகியோர் கண்ட உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். திருத்துறைப்பூண்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலி யர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் பி.அன்பரசி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஆஷா, மாவட்டச் செயலாளர் சி. வினோதா ஆகியோர் உரை யாற்றினர். மாநில-மாவட்ட பொறுப்பா ளர்கள் எஸ்.செங்குட்டுவன், வி.தெட்சிணா மூர்த்தி, தெ.விஜய்ஆனந்த், ஆர்.அறிவுச் செல்வம் ஆகியோர் பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் பி.மகாலிங்கம் நன்றி கூறினார்.