திருச்சிராப்பள்ளி, பிப்.25- திருச்சி மாநகராட்சி 44-ஆவது வார்டுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் அருகில் கேட் எண் 322ல் சுரங்கப்பாதை பணியை உடனே துவங்க வேண்டும், பொன் மலை ஆர்மரிகேட் முதல் ஊரக பகுதி களில் தார்ச்சாலையை புதுப்பிக்க வேண் டும், மாநகராட்சி நிர்வாகமும், மாநில நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து நாகம்மை வீதி வழியாக கல்கண்டார்க் கோட்டை மெயின்ரோட்டிற்கு செல்லும் பிர தான சாலையை தார்சாலையாக அமைத்துத் தர வேண்டும், நார்த் டி கேட் முதல் பொன்மலை ஸ்டேசன் வரை உள்ள தார் சாலை மற்றும் நார்த் டி சப்வே தார்சாலை யை புதுப்பிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி திருச்சி மாநகர குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழ மையன்று மேலகல்கண்டார்கோட்டை பழைய பஞ்சாயத்து அலுவலகம் அருகில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பா.லெனின் தலைமை வகித்தார். மகாலெட்சுமி நகர் நலச்சங்க தலைவர் மகேந்திரன், நாகம்மைவீதி விஸ்த ரிப்பு குடியிருப்போர் நலச்சங்க செல்வ ராஜன், மகாத்மாகாந்தி நினைவு நலச் சங்கதலைவர் மோகன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், மாநகர கூட்டமைப்பு நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகி யோர் விளக்கிப் பேசினர். அப்போது ஒருமாத காலத்திற்குள் பணி நிறைவு பெறவில்லை என்றால், ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்ட மிட்டப்பட்டுள்ளதாக அறிவித்தனர். ஆர்ப் பாட்டத்தில் திருச்சி மாநகர குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.