districts

சேதமடைந்த பொதுக் கழிப்பிடக் கதவை சரி செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.6 - சாலை, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி  பாண்டமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 8,9 மற்றும்  10 ஆவது வார்டுக்கு உட்பட்ட உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெருவில் உள்ள பொது கழிப்பிடத்தில் சேதமடைந்துள்ள கதவுகளை சரி செய்ய வேண்டும்.

பாண்ட மங்கலம் மாரியம்மன் கோவில் பாதையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.  வெள்ளாளர் தெருவின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலை தூர்வாரி குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். புது காலனி யில் ஏழை, எளிய பொதுமக்கள் பயன்படுத்த  பொது குடிநீர் குழாய் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

உறையூர் நவாப்தோட்டம் முதல் அரவானூர் வரை உள்ள தரம் இல்லாத சாலைகளை செப்பனிட வேண்டும்.  கவுண்டம்பாளையத்தில் குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிக் குழு சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

பாண்டமங்கலம் மாரியம்மன் கோவில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார்.  கோரிக்கைகளை விளக்கி மத்திய கட்டுப் பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மேற்கு பகுதி  செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர்.  இதில் கிளைச் செயலாளர் உமாராணி, பகுதிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.