அரியலூர், மார்ச் 2- துப்புரவுப் பணியாளர்க ளை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர், ஜெயங்கொண் டத்தில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஜெயங்கொண்டம் நக ராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் சிலம்புச்செல்வி தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடி யுசி மாவட்ட பொதுச் செய லாளர் டி.தண்டபாணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், துப்பு ரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆள் குறைப்பு நடவடிக் கையை கைவிட வேண்டும். தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆப் ரேட்டர்கள், தூய்மை பணி யாளர்கள், துப்புரவுப் பணி யாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.