districts

img

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 7-

      பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண்  சிங்கை பதவி நீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்  வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்  பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இதனொரு பகுதியாக அனைத்  திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட் டம் லால்குடி ரவுண்டானா அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் விசாலாட்சி தலைமை வகித்  தார். வாலிபர் சங்க மாவட்டப் பொரு ளாளர் ஆணைமுத்து, மாவட்டத் தலைவர் நாகராஜ் ஆகியோர் பேசி னர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அரசு ஊழியர்கள்

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் பால் பாண்டி தலைமை வகித்தார்.  

   மகளிர் துணைக் குழு உறுப்பி னர் பாரதி, சங்க மாவட்ட செய லாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சிராஜூதீன், சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், மாதர் சங்க  மாவட்டத் தலைவர் சரஸ்வதி ஆகி யோர் பேசினர். அரசு ஊழியர்  சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி நிறைவுரையாற்றி னார். மாவட்டப் பொருளாளர் பாபு  நன்றி கூறினார். அனைத்துத் துறை ஊழியர்களும், மாவட்ட இணைச் செயலாளர் அமுதவல்லி மற்றும் துறை வாரி சங்க நிர்வாகிகள், வட்டக்கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 தஞ்சாவூர்

    தஞ்சாவூர் பனகல் கட்டிடம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சாவூர் வடக்கு வட்ட தலை வர் டி.இளங்கோவன் தலைமை வகித்தார். வடக்கு வட்டச் செயலா ளர் ச.அஜெய்ராஜ் விளக்கிப் பேசினார்.

    ஆய்வக நுட்பனர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.என். சாந்தாராமன் வாழ்த்திப் பேசி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் நிறைவுரையாற்றி னார். அரசு ஊழியர் சங்க வடக்கு  வட்ட துணைத்தலைவர் சரவணன் நன்றி கூறினார். கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை அரசு ஊழியர் சங்க வட்டக்  கிளையின் சார்பில் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கும்பகோணம் வட்டத் தலை வர் வெங்கடேசன் தலைமை வைத்தார்.  கால்நடை பராமரிப்பு உதவி யாளர் முன்னேற்ற சங்கம் மாவட்  டத் தலைவர் காமராஜ் துவக்கி  வைத்து பேசினார். வட்டத்துணை தலைவர் பிரபாகரன், திருவிடை மருதூர் வட்டக்கிளை கண்ணன், வட்ட இணைச்செயலாளர் சசி குமார் ஆகியோர் விளக்கிப் பேசி னர் வட்டப் பொருளாளர் மதியழ கன் நன்றி கூறினார்.

திருவாரூர்

     திருவாரூர் புதிய ரயில் நிலை யம் எதிரே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநிலச் செயலா ளர் பி.எஸ்.மாசிலாமணி தலைமை வகித்தார்.

    விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சேகர், மாவட்டத் தலைவர் தம்பு சாமி, சிஐ டியு மாவட்ட செயலாளர் முருகை யன், மாவட்டத் தலைவர் அனிபா,  சிபிஐ மாவட்ட துணைச் செயலா ளர் கேசவராஜ், ஏஐஒய்எப் மாவட்டச் செயலாளர் அருள் ராஜன், மக்கள் அதிகாரம் ஒருங்கி ணைப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.