திருவாரூர், ஏப்.13- செங்கல்பட்டு துணைப் பதிவாளர் (வீட்டு வசதி) அலுவலகத்தில் பணி யாற்றும் அதிகாரிகள், ஊழியர் களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசும் துணைப் பதிவாளர் (வீட்டு வசதி) உமா தேவியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மண்டல இணைப்பதிவாளர் அலு வலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் மு.குமாரசாமி, தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் எம்.ஐயப்பன், மாநிலச் செயலாளர் பி.விஜயன், அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.செங் குட்டுவன், மருந்தாளுநர் சங்க மாநிலச் செயலாளர் உ.சண்முகம், வேளாண் மைத்துறை அமைச்சு பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ந.தம்பி துரை, சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பி.மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.