districts

img

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.22 - பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு  அதிகாரிகளை அனுப்பி வைத்து ஆய்வு செய்து, கடும்  பாதிப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு உரிய நிவார ணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ மா.கோவிந்தராசு, முன்னாள் எம்எல்ஏ.,வும் தஞ்சை  மாவட்ட அவைத் தலைவருமான எஸ்.வி திருஞானசம்பந்தம் ஆகியோர் தலைமையில், பேராவூரணி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி வடக்கு உ.  துரைமாணிக்கம், சேதுபாவாசத்திரம் தெற்கு அருணாசலம், வடக்கு மதிவாணன், பேராவூரணி நகர செயலாளர் வி.என். பக்கிரிசாமி, ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.