திருச்சிராப்பள்ளி, அக்.16- 100 நாள் வேலைத்திட்டத்திற் கான நிதியை தொடர்ந்து குறைத்து, இத்திட்டத்தை சீரழிக்கும் மோடி அரசைக் கண்டித்தும் சம்பள பாக்கியை உடனே கொடுக்க வேண்டும், வேலைக்கு வரும் அனைவருக்கும் 100 நாட்கள் முடியும் வரை தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், ஆதார் லிங்க், பிஐபி லிஸ்ட் என ஆட்களை குறைப்பதை கைவிட வேண்டும்,. 200 நாட்கள் வேலை, தினசரி கூலி ரூ.600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில் நம்பர் 1 டோல் கேட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாருதி சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர்கள் செல்வம், முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர். அரியலூர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மாநிலப்பொருளாளர் பழனிச் சாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் இளங்கோவன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில் வேல் ஆகியோர் பேசினர். ஜெயங் கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ரவி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பிரகாஷ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பேசினர். செந்துறையில் மாவட்டக் குழு உறுப்பினர் த.கருப்பையா தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் எ.கந்தசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் ஆகியோர் பேசினர்.