districts

ஒன்றிய அரசைக் கண்டித்து நவ.26 இல் ஆர்ப்பாட்டம் தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு

சேலம், நவ.21– தலேமா எலக்ட்ரானிக் ஆலை நிர் வாகத்தின் ஊழியர் விரோதப்போக்கை  கண்டித்து, சேலத்தில் அனைத்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். சேலத்தில் செயல்பட்டு வரும் தலேமா எலக்ட்ரானிக் ஆலை நிர்வா கம் மேற்கொண்டுள்ள லே ஆப் நட வடிக்கையை கைவிட வேண்டும். ஆட் குறைப்பு, சம்பளக் குறைப்பு, ஆளை  மூடல் உள்ளிட்ட தொழிலாளர் விரோத  நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வேலை செய்யும் பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண் டும். இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் 500 தொழிலாளர்களின் பணிப்பாது காப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் வியாழனன்று அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு, சிஐடியு தலேமா ஆலை கிளைத் தலைவர் கோபு தலைமை வகித் தார். இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச்செயலாளர் ஷபி, சிஐ டியு பொதுத்தொழிலாளர் சங்கத் தலை வர் வெங்கடபதி, பொதுச்செயலாளர் பொன்.ரமணி, ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் நல்லமுத்து, தலைவர் விஜ யன் உட்பட 300க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.