districts

பழனி பேருந்து நிலையத்தில் 2 நாட்களில் அனாதைகளாக விடப்பட்ட 5 பேர் பலி

மனநல காப்பகத்தை விரைந்து திறக்க கோரிக்கை திண்டுக்கல், டிச.27- பழனியில் கடந்த 2 நாட்களில் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 5 பேர் இறந்தனர். மனநல காப்பகத்தை விரைந்து திறந்திருந்தால் இந்த இறப்பு களை தவிர்த்திருக்கலாம் என்று மாவட்ட  நிர்வாகத்தை தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் நலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.  இது தொடர்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயந்தி, மாவட்டச்செயலாளர் பகத்சிங் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:  பழனி முருகனை தரிசிக்க நாள் தோறும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கி றார்கள். இவ்வாறு வருகை தரும் பக்தர்  களில் சிலர் தங்கள் இல்லங்களில் உள்ள  மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கள் மற்றும் வயதானவர்களை பழனியில் அனாதையாக விட்டுவிட்டு சென்று விடு கின்றனர். இவ்வாறு அனாதைகளாக விடப்  படும் இவர்கள் உணவிற்காக படும் துன்பம்  சொல்லிமாளாது. இவர்களில் பெரும் பாலோனோர் பழனி பேருந்து நிலையத்தில் தங்கி யாசகம் வாங்கி பிழைப்பதும், பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்குவதும், வாடிக்கையாக உள்ளது.  இவ்வாறு படுத்து உறங்கியவர்களில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஐந்து  பேர் இறந்தனர். இவர்கள் இயற்கையாக மரணித்திருந்தாலும் இவர்களின் இறப்  பிற்கு மூன்று துறைகள் கட்டாயம் பொறுப்பேற்க வேண்டும். முதலாவதாக,  இறந்த ஐந்து பேரில் மனநிலை பாதிக்கப் பட்டவர்களும் இருந்திருக்ககூடும். அவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்டவர் இறக்காமல் பாதுகாக்க வசதியாக பழனி யில் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகளுக்கான காப்பகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மாற்றுத்  திறனாளிகள் சங்கம் தொடர்ந்து கோரி வரு கிறது.  தொடர்ந்து போராடியதன் பலனாக தற்போது காப்பகம் அமைக்கும் பணிகள்  அனைத்தும் நிறைவடைந்து. பல மாதங்க ளாகியும் திறக்கப்படாத நிலையே உள் ளது. காப்பகத்தை உரிய காலத்தில் திறந்தி ருந்தால் இறந்தவர்களுடைய உயிரை காப்பாற்றியிருக்கலாம். முறையான பராம ரிப்பு செய்து அவர்களுக்கான வசதிகளை  செய்து கொடுத்திருந்தால் இதுபோன்ற இறப்புகள் கட்டாயம் நிகழாமல் தடுத்தி ருக்க முடியும். மேலும் பழனியில் சில மாதங்களுக்கு முன்னதாக திறக்கப்பட்ட வீடற்றோர்

இல்லத்தில் இறந்த நபர்களை சேர்த்திருந்தால் முறையான பராமரிப்பால் பாதுகாத்திருக்க முடியும். இடவசதி போத வில்லை என்றால் தேவஸ்தான நிர்வா கத்தின் சார்பில் கூடுதலாக வீடற்றோர் தங்கு வதற்கான காப்பகத்தை புதிதாக ஏற்  படுத்தி தர வலியுறுத்தியிருக்க வேண்டும்.  எங்கெல்லாம் வீடற்றவர்கள் இருக்கிறார் களோ அவர்களை தேடிப்பிடித்து வீடற் றோர் இல்லத்தில் சேர்க்கும் தனது சமூக கடமையை பழனி நகராட்சி நிர்வாகம் செய்திருந்தால் கண்டிப்பாக பறிபோன உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.  சமூக விரோதிகள்,  குடிகாரர்கள் அட்டூழியம் இரவு பத்து மணிக்குமேல் தமிழகத்தி லேயே பழனியில் மட்டும்தான் சமூக விரோ திகள், குடிகாரர்கள் படுத்துறங்கும் இடமாக  பழனி பேருந்து நிலையம் திகழ்ந்து வரு கிறது. காவல்துறை முறையான ரோந்துப்  பணியில் ஈடுபட்டு இத்தகைய நபர்களை விரட்டி இருந்தால் மேற்கண்ட சம்பவம் நிக ழாமல் தடுத்திருக்கலாம். 24 மணிநேரமும் குடிகாரர்கள் படுத்து உறங்குவதும், அங் கேயே மதுகுடிப்பதும் வாந்தி எடுப்பதும் என எப்போது பார்த்தாலும் சமூக விரோதி களின் கூடாரமாக பழனி பேருந்து நிலையம்  மாற்றப்பட்டுவிட்டது. எனவே தமிழக அர சும், மாவட்ட நிர்வாகமும் இதுபோன்ற உயிரிழப்பை தடுக்கின்ற வகையில் உடனடி யாக பழனியில் மனநல காப்பகத்தை திறக்க வும், தெருவில் திரியும் அனைவரையும் வீடற்றோர் இல்லத்தில் சேர்ப்பதையும், அறநிலையத்துறை சார்பில் புதிதாக வீடற்றோர் இல்லம் கட்டவும், காவல்  துறையின் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி  பழனி பேருந்து நிலையத்தை சமூக விரோதி களின் பிடியிலிருந்து மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.