மயிலாடுதுறை, பிப்.20- மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறை முகம் உள்ளது. இந்தத் துறை முகத்தின் மூலம் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள மற்றும் 350 க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் ஐந்தாயிரத்திற்கும் மேற் பட்ட மீனவர்கள் தினந்தோ றும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மேலும் துறைமுக வளா கத்தில் பல்வேறு பணிகளில் சுற்றுவட்டார கிராமங்க ளைச் சேர்ந்த தொழிலாளர் கள் ஈடுபட்டு வருகின்றனர். சுற்று வட்டார கிராமங்க ளைச் சேர்ந்த சுமார் 5,000க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் இங்கு மீன் வலை பின்னுதல்,மீன்களை தரம் பிரித்தல்,விற்பனைக்கு அனுப்புதல், கருவாடு விற் பனை செய்தல், கருவாடு களை தரம் பிரித்தல், ஐஸ் கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடு பட்டு வருகின்றனர். ஆனால் தொழிலாளர்கள் பயன் படுத்துவதற்கு கழிவறை இல்லை. துறைமுகத்தில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க சிர மப்படுகின்றனர். கடந்த இருபது வரு டங்களுக்கு முன்பு இங்கு இயங்கி வந்த கழிவறைக் கட்டடம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கழிவறையை இடித்து விட்டு புதிய கழிவறை கட்ட வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. பழையாறு துறை முகத்தில் வேலை பார்த்து வரும் மக்கள் நலன் கருதி புதிய கட்டடம் கட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என் கின்றனர் மீனவர்களும் மீன் பிடித் தொழிலாளர்களும்.