கும்பகோணம், மே 8-
டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்களின் இறக்குக் கூலியை உயர்த்தி கொடுக்கக் கோரி சிஐடியு தலைமையில் டாஸ்மாக் சுமைப் பணி தொழிலா ளர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே திருபுவனத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வாணிப கழகம் முன்பு சிஐடியு சார்பில் மாவட்ட துணைத் தலைவர் சா.ஜீவ பாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் ஜெயபால், சிஐடியு மாவட் டத் துணைத் தலைவர்கள் என்.பி. நாகேந்திரன், பக்கிரிசாமி, சேகர், கிளைத் தலைவர் பிரபு, கிளைச் செயலாளர் செல்வம், பொருளா ளர் சரவணன் உள்ளிட்ட சுமை பணியாளர்கள் கலந்து கொண்ட னர்
ஆர்ப்பாட்டத்தில், நடைமுறை யில் உள்ள தொழிலாளர்கள் பெற்று வரும் கூலியை குறைக்கும் நோக் கத்தோடு மாற்றம் செய்யக்கூடாது. மதுபான உற்பத்தி ஆலை நிர்வா கங்கள் இறக்கு கூலி உயர்வை உடனே வழங்கிட வேண்டும். இதில் தமிழக அரசு தலையிட்டு மதுபான ஆலை நிர்வாகத்தை அழைத்துப் பேசி சுமைப் பணியாளர்களுக்கு கூலி ஊயர்வை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐ டியு மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், மாவட்டத் தலைவர் என்.அனிபா, மாவட்டப் பொருளாளர் இரா.மாலதி, ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை மாவட்டத் தலை வர் முரளி, ராஜேந்திரன் உட்பட டாஸ்மாக் சுமைப் பணி தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சுமைப் பணி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். செயலாளர் கண்ண தாசன், பொருளாளர் என்.ஜெய்சங் கர் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின், பொருளாளர் பி. ரெங்கராஜ் ஆகியோர் விளக்கி பேசினர்.