districts

img

விவசாயத் தொழிலாளர்களுக்கான நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை, அக்.29 - தீபாவளியை கருத்தில் கொண்டு நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதிய பாக்கியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பேரவைக் கூட்டம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் சிறப்புரையாற்றினார். விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி, துணைத் தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் பேசினர். தீபாவளிப் பண்டிகையை கருத்தில்கொண்டு நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். ஒன்றிய அரசு அறிவித்துள்ள, பிரதமரின் அனைவரும் வீடு கட்டும் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழும் வீடற்றவர்களுக்கும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்க வேண்டும். நிலமற்ற ஏழை மக்களுக்கு அரசுப் புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி நில விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நவ.8 பூக்கொல்லையில் மனு கொடுக்கும் போராட்டம்

தஞ்சாவூர், அக்.29-  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய சிறப்புப் பேரவை, பேராவூரணி குமரப்பா பள்ளி அருகே  ஞாயிறன்று நடைபெற்றது. பேரவைக்கு எஸ்.சரளா தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் இ.வசந்தி துவக்க உரையாற்றினார். மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி நிறைவுரையாற்றினார். பேரவையில், மாதர் சங்க ஒன்றியத் தலைவ ராக மேனகா, செயலாளராக சரளா செந்தில், பொருளாளராக பர்வீன் மற்றும் துணைச் செய லாளர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்ட 15  பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.  மூன்று மாதமாக நிலுவையில் உள்ள நூறு  நாள் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க  வேண்டும். தகுதியுள்ள விடுபட்ட அனை வருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும். பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். குடிமனையில்லாத அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். மருங்கப்பள்ளம் சிவன் கோவில், காரங்குடா, சத்திரம் புதுத்தெரு பகுதியில் பெண் களுக்கான கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்ட சம்பள  பாக்கியை வழங்க வலியுறுத்தி, நவம்பர் 8 அன்று (புதன்) பூக்கொல்லையில் உள்ள சேது பாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம்  நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாதர் சங்க  மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வசந்தி, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஆர்.எஸ். வேலுச்சாமி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மாவட்டக் குழு உறுப்பினர் வீ. கருப்பையா, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட  துணைத் தலைவர் மேனகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.