பாபநாசம், ஜூன் 13-
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலராமநல்லூர் கிராமத்தை இணைக்க பாலம் கட்ட வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆறு மேலராமநல் லூர் கிராமத்திற்கு முன்பாக வடக்குக் கொள்ளிடம், தெற்குக் கொள்ளிடம் என இரண்டு பிரிவு களாகப் பிரிந்து, மீண்டும் ஒன்றாக இணைகிறது. இந்த இரு பிரிவு களுக்கும் இடையில் மேல ராம நல்லூர் கிராமம் சிறு தீவாக உள் ளது. இந்த கிராமம் தஞ்சாவூர் மாவட்டத்துடன் இணைப்பு இல்லா மல் அமைந்துள்ளது.
மேலராமநல்லூர் கிராமத்தின் வடக்கே அரியலூர் மாவட்டமும், தெற்கே தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ் தலமும் அமைந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்திலிருந்து மேல ராமநல்லூர் கிராமத்தை இணைக்கும் வகையில் கொள்ளி டத்தின் வடக்குப் பிரிவு ஆற்றின் குறுக்கே பொதுப் பணித்துறையின ரால் 2016- ஆம் ஆண்டு பாலம் கட்டப் பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த வர்கள் வியாபாரம் மற்றும் பள்ளி, கல்லூரி, அவசர மருத்துவத் தேவை களுக்கு தஞ்சாவூர் மாவட்டத்திற் குச் செல்ல கொள்ளிடம் ஆற்றின் தெற்குப் பகுதியை ஆற்றின் குறுக் காக நடந்து சென்று கடக்கின்ற னர்.
மழைக் காலங்களில் ஆற்றில் நடந்தோ அல்லது பரிசல் மூலமாக கடக்க முற்படும்போது உயிரிழப்பு கள் ஏற்படுகின்றன. வெள்ளப் பெருக்குக் காலங்களில் மேல ராமநல்லூர் மக்கள் கபிஸ்தலம் செல்வதற்கு திருமானூர் வழியாக சுமார் 41 கி.மீ சுற்றிச் செல்ல வேண்டி யுள்ளது.
மேல ராமநல்லூர் கிராமத்தை தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்து டன் இணைக்கும் வகையில் கொள் ளிடத்தின் தெற்குப் பிரிவு ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை.
மேம்பாலம் அமைக்கப்பட் டால், அரியலூர் மாவட்டம் மேல ராமநல்லூர், அழகியமணவாளம், ஏலாக்குறிச்சி, காமரசவள்ளி மற் றும் தஞ்சாவூர் மாவட்டம் மேட்டுத் தெரு, குடிகாடு, கணபதி அக்ர ஹாரம், கபிஸ்தலம், பாபநாசம் பகு திகளை மூன்று கி.மீ. தூரத்தில் இணைக்க முடியும்.
தஞ்சாவூர்-அரியலூர் மாவட் டங்களுக்கு விவசாய விளைப் பொருட்கள் கொண்டு செல்வது எளிதாவும் விரைவாகவும் நடை பெறும். அரியலூர் மாவட்டத்திலி ருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சிமெண்ட், சுண்ணாம்பு, ஜல்லி, மணல் போன்றவற்றை குறைவான தூரத்தில் விரைவாக கொண்டு செல்லலாம்.
தமிழக அரசு மேல ராமநல்லூர் கிராமத்தை தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் கொள்ளிடத்தின் தெற் குப் பிரிவு ஆற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும்.
இதன் மூலம் அரியலூர் மாவட்டத்திலிருந்து மேல ராம நல்லூர் கிராமத்தை இணைக்கும் வகையில் கொள்ளிடத்தின் வடக்குப் பிரிவு ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறையினரால் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்பாட் டில் இருக்கும் பாலத்தின் பயன் பாடும் முழுமை பெறும். நமது நிருபர்