பெரம்பலூர், ஏப்.15- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் சனிக்கிழமையன்று பய னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், 287 பயனாளிகளுக்கு ரூ.4.19 கோடி மதிப் பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் க.கற்ப கம் தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். மொத்தம் 287 பயனாளிகளுக்கு ரூ.4,18,84,738 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கை யற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), ந.கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), மீனா அண்ணாத்துரை (பெரம்பலூர்), க.ராமலிங்கம் (வேப்பந்தட்டை) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.