பொன்னமராவதி, ஜூன் 27- புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி சாதாரணக் கூட்டம் பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் வெங்க டேஷ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல்அலுவலர் மு.செ.கணேசன் வர வேற்றார். கூட்டத்தில் 15 ஆவது நிதிக் குழு அன் டைடு திட்டத்தின் கீழ் ரூ 16.56 லட்சத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம் அமைத் தல், வலையபட்டி மயானத்தில் சிமெண்ட் கல் சாலை அமைத் தல், 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் டைட் மானி யத்தில் சுமார் ரூ.11 லட்சத்தில் பெருமாள் கோவில் வீதி மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டி யில் சுற்று சுவர் அமைத்தல், பகச்சி ஆசாரி தெரு, பெரு மாள் கோவில் வீதி ,வீரன் செட்டியார் ஊரணி தெரு, சாவான் குண்டு தெரு, பொன் னமராவதி மெயின்ரோடு, வலம்புரிநாத சுவாமி தெறகு வீதி, மற்றும் பாண்டிமான் கோவில் தெரு ஆகியவற்றில் உள்ள சிறு மின் விசையிறைப் பான்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளல், பொன்ன மராவதி பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தி னை அனைத்து வசதிகளு டன் கூடிய பேருந்து நிலை யமாக அமைத்தல், ஒருங்கி ணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வணிகவளாக கடன் நிலுவை தொகை அசல் வட்டி ரூ45.86 லட்சம் செலுத்துதல், நாடா ளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து வடிகால் ரூ 10 லட்சத்தில் அமைத்தல், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூ 21 லட்சத்தில் பயணியர் நிழல்குடை அமை த்தல் ஆகியவற்றிற்கு ஒப்பு தல் வழங்கியது. மேலும் பிறப்பு இறப்பு பதிவு செய்தல், வரி மற்றும் வரியற்ற இனங்கள் நிலுவை விபரம்,வரவு செலவு விபரம், உள்ளிட்ட 28 பொருட்கள் விவதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டன.