districts

img

தஞ்சாவூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு

தஞ்சாவூர், மே 2-  

   தஞ்சாவூர் மாவட்டத் தல், திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க் கிழமை காலை வரை விடிய  விடிய மழை பெய்தது. மழை யின் காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தம்பதி இருவர் உயிரிழந்த னர். மழையால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

  தஞ்சாவூர் மாவட்டத் தல் கடந்த சில நாட்களாக  வெப்பம் வாட்டி வதைத்து  வந்த நிலையில், திங்கள் கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை மாவட்டம் முழுவதும்  பரவலாக விடிய விடிய மழை பெய்தது.

  அதிகபட்சமாக அதி ராம்பட்டினத்தில் 153 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. திருக்காட்டுப்பள்ளி-127, பூதலூர்- 114, மதுக்கூர்-90, பட்டுக்கோட்டை-83, கல் லணை-73, வெட்டிக்காடு- 66, ஒரத்தநாடு-64, திருவை யாறு- 53, கும்பகோணம்-45, ஈச்சன்விடுதி-45, அணைக் கரை-44, தஞ்சாவூர்- 41மில்லி  மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

  பேராவூரணி அருகே காலகம் ஊராட்சி மிதியக் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி உடையப்பன்(70) செவ் வாய்க்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து இயற்கை உபாதையைக் கழிக்க வெளியே வந்தபோது, மழை யினால் சேதமடைந்து அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித் துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். உடையப்பனின் அலறல்  சத்தம் கேட்டு அவரது மனைவி  சம்பூர்ணம் (62)  வெளியே  வந்த போது அறுந்து கிடந்த  மின்கம்பியை மிதித்து அவ ரும் மின்சாரம் தாக்கி உயிரி ழந்தார்.

   செவ்வாய்க்கிழமை காலை பட்டுக்கோட்டை அருகே கழுகுப்புலிக்காட் டில் மழையினால்  சாலை யோரத்தில் உள்ள மரக் கிளை ஒன்று, அந்த வழியாக  கடைக்கு பால் வாங்கச் சென்ற தெய்வானை (70) என்ற  மூதாட்டி மீது முறிந்து  விழுந்ததில் படுகாயமடைந் தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் மீட்டு பட்டுக்  கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும்  வழியில் அவர் இறந்துவிட்டார்.

   அதிராம்பட்டினத்தில் பெய்த மழையின் காரண மாக காவல் நிலையத்தை சுற்றிலும் மழை நீர் தேங்கி யதால், காவலர்கள் காவல்  நிலையத்துக்குள் செல்ல  முடியாமல் அவதிப்பட்டனர்.

   தஞ்சாவூரில் பெய்த மழையின் காரணமாக வடக்கு வீதியில் உள்ள முன்  னாள் நகர்மன்றத் தலைவர் கு.சுல்தான் என்பவரது பழமையான வீடு இடிந்து சேதமானது.

   தஞ்சாவூர் - ரெட்டிப் பாளையம் சாலையில் மழை  நீர் தேங்கி நின்றது. மழை நீர்  வடிய வழியில்லாததால் சாலை குளம் போல் காட்சி யளித்தது. செவ்வாய்க் கிழமை பிற்பகலுக்குப் பிறகு மழைநீரை பொக்லின் இயந்  திரம் மூலம் வடிகால் ஏற் படுத்தி வடியவைத்தனர்.

   தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயி கள் சித்திரைப் பட்டத்தில் உளுந்து, எள் ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்த மழையினால் இளம்  பயிராக உள்ள உளுந்து, எள் பயிர்கள் மழையால் பாதிக் கப்பட்டுள்ளது.