மயிலாடுதுறை, பிப்.6- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி யில் டென்மார்க் நாட்டினர் வந்த 400 ஆவது ஆண்டு இந்திய-டென்மார்க் நட்புறவு விழா சனிக்கிழமையன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. டென்மார்க் நாட்டில் உள்ள ‘‘டென் மார்க் தரங்கம்பாடி நல சங்கம்’’ எனும் அமைப்பு சார்பில் தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்கள் (டென்மார்க்) ஆட்சி செய்து 400 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூரும் வகையில், தரங்கம்பாடி யில் 400 ஆவது ஆண்டு விழா சனிக்கிழ மையன்று துவங்கி இரு தினங்கள் நடை பெற்றது. இதையொட்டி, டென்மார்க் நாட்டி லிருந்து ஏராளமானோர் தரங்கம்பாடி வந்தி ருந்தனர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற தீபச்சுடர் ஓட்டம் தரங்கம்பாடி நுழைவு வாயில் அருகே துவங்கி நக ரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று சீகன்பால்கு சிலை அருகில் நிறைவடைந்தது. விழாவில், டேனிஷ்-தரங்கம்பாடி நலச்சங்கத்தின் தலைவர் பவுல் பீட்டர்சன், துணைத்தலைவர் க்நூட் ஹெல்ஸ், பூம்பு கார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கன், பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, புதிய எருசலேம் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ், தபேமாலு கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.